உள்ளடக்கத்திற்கு செல்ல

எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் முதல் நாளில் 68 சதவிகிதம் விண்ணப்பம்
எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் முதல் நாளில் 68 சதவிகிதம் விண்ணப்பம்
ADDED : ஜூலை 15, 2026 01:17 AM

அ நிறம் | அளவு
'எஸ் .பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் 9,813 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ.,வுக்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியிடப்பட்ட பங்குகளுக்கு முதல் நாளிலேயே 68 சதவீதம் அளவிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்களுக்கான ஒதுக்கீடு முதல் நாளிலேயே முழுமையாக நிரம்பியுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் ஒதுக்கீட்டில் 62 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 139 சதவீதமும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் 8 சதவீதமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
