/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
3 நாட்களில் ரூ.27,000 கோடிக்கு பங்கு விற்பனை
/
3 நாட்களில் ரூ.27,000 கோடிக்கு பங்கு விற்பனை
ADDED : அக் 07, 2024 12:28 AM

மும்பை:புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, பங்குச் சந்தையில் இம்மாதத்தின் முதல் மூன்று அலுவல் நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 27,142 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு, கடந்த செப்டம்பர் மாதத்தில் 57,724 கோடி ரூபாயாக, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்த நிலையில், கடந்த வாரம் சந்தையின் மூன்று அலுவல் நாட்களில், அன்னிய முதலீட்டளார்கள் 27,142 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்டவையே அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதற்கு பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் 34,252 கோடி ரூபாய் பங்குகளை விற்றிருந்த நிலையில், ஜூன் மாதம் முதல் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்து வந்தனர். மொத்தத்தில், கடந்த ஜனவரி, ஏப்ரல், மே மாதங்களை தவிர நடப்பாண்டில், அன்னிய முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய பங்குகளில் முதலீடு செய்து வந்துள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.