sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பருத்தி இறக்குமதி வரியை நீக்க ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை

/

பருத்தி இறக்குமதி வரியை நீக்க ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை

பருத்தி இறக்குமதி வரியை நீக்க ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை

பருத்தி இறக்குமதி வரியை நீக்க ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை


ADDED : டிச 28, 2024 10:39 PM

Google News

ADDED : டிச 28, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:முதல் தர பருத்தி விளைச்சல் பற்றாக்குறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இறக்குமதி மீதான வரியை ரத்து செய்ய, மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில், அக்., முதல் செப்., வரையிலான காலகட்டம் பருத்திப் பருவமாக கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 300 முதல் 323 லட்சம் பேல் பருத்தி மகசூல் செய்யப்படுகிறது.

இந்தியாவின் 90 சதவீத பருத்தி அறுவடை, டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நடைபெறுகிறது. பருத்திக்கான தேவை அதிகரிப்பதால், இறக்குமதி செய்யப்படுகிறது.

பருத்தி இறக்குமதி மீது, 11 சதவீத வரி விதிக்கப்படுகிறது. நடப்பாண்டில், முதல் தர பருத்தி மகசூல் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிக தேவையை கருதி, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் ஜெயபால் கூறியதாவது:

2024-25 சீசனில், முதல் தர பருத்தி விளைச்சல் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குறைந்தபட்சம் 50 லட்சம் பேல் பருத்தி இறக்குமதி செய்யும் வகையில், அரசு தாமதமின்றி, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் வாயிலாக, ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

தற்போது நுாற்பாலைகளை விட, வர்த்தகர்கள் மற்றும் சி.சி.ஐ., நிறுவனங்களே மூன்று மடங்கு பருத்தியை வாங்கி, இருப்பு வைத்து வருகின்றன.

இதனால், கடந்த காலங்களைப் போல செயற்கை விலையேற்றம் செய்யும் சூழல் உருவாகி வருகிறது. மத்திய அரசு இதைத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us