டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 25,095க்கு கீழே இறங்காவிட்டால் ஏற்றத்துக்கு வாய்ப்பு
டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 25,095க்கு கீழே இறங்காவிட்டால் ஏற்றத்துக்கு வாய்ப்பு
UPDATED : செப் 13, 2025 12:16 AM
ADDED : செப் 13, 2025 12:11 AM

நிப்டி
நா ளின் ஆரம்பத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 25,074- புள்ளிகளில் துவங்கிய நிப்டி, 11.30 மணி அளவில் 25,139 என்ற உச்சத்தை அடைந்து, அதன் பின் பெரிய மாற்றம் ஏதும் நிகழாமல், நாளின் இறுதியில் 108 புள்ளிகள் ஏற்றத்துடன் 25,114 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):50.17 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):1.63 என இருப்பது ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆனால், 25,095 என்ற நிலைக்கு கீழே போகாமல் தொடர்ந்து வர்த்தகமாக வேண்டியது அவசியம். இது நடந்தால் மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
![]() |
தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி நிப்டி 25,055, 24,995 மற்றும் 24,955 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,150, 25,200 மற்றும் 25,235 என்ற எல்லைகளை, தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
நிப்டி பேங்க்
வ ர்த்தக ஆரம்பத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 58,781- புள்ளிகளில் ஆரம்பித்த நிப்டி பேங்க், 9.30 மணி அளவில் இறக்கத்தை சந்தித்து, 54,580 என்ற குறைந்தபட்ச அளவை சந்தித்து, அதன் பின் ஏற ஆரம்பித்து, 54,852 புள்ளிகள் எனும் உச்சத்தை தொட்டுவிட்டு, நாளின் இறுதியில் 139 புள்ளிகள் ஏற்றத்துடன், 54,809- புள்ளிகளில் நிறைவடைந்தது.
![]() |