sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

11 மணி நேரம் விமானம் தாமதம் பெங்களூரில் பயணியர் போராட்டம்

/

11 மணி நேரம் விமானம் தாமதம் பெங்களூரில் பயணியர் போராட்டம்

11 மணி நேரம் விமானம் தாமதம் பெங்களூரில் பயணியர் போராட்டம்

11 மணி நேரம் விமானம் தாமதம் பெங்களூரில் பயணியர் போராட்டம்

1


ADDED : ஜூலை 07, 2024 03:16 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் இருந்து 11 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால், பெங்களூரில் தரையிறங்கியதும் பயணியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டில்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் புறப்பட இருந்தது.

ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரவு 10:30 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரவு 10:30 மணிக்கும் புறப்படவில்லை.

இதுகுறித்து பயணியர் கேட்டபோது, விமானத்திற்குள் இருந்த பணிப்பெண்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. பயணியருக்கு தண்ணீர், உணவு வசதியும் செய்து கொடுக்கவில்லை. இரவு முழுதும் விமானம் புறப்படவே இல்லை.

நேற்று காலை 7:00 மணிக்கு டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் பெங்களூருக்கு 9:30 மணிக்கு வந்தது.

விமானத்திலிருந்து இறங்கியதும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மீது பயணியர் கோபத்தை வெளிப்படுத்தினர். யாரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை பயன்படுத்த வேண்டாம் என, கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்களை விமான நிலைய ஊழியர்கள் சமாதானப்படுத்திஅனுப்பினர்.

6.7.2024 / சுப்பிரமணியன்

7_DMR_0014

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியரிடம், பயணியர் முறையிட்டனர்.






      Dinamalar
      Follow us