ADDED : ஏப் 04, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கமகளூரு : பெங்களூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆச்சார்யா, கோவில் பணிக்காக, 85,000 ரூபாய் எடுத்துக் கொண்டு, உடுப்பிக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.
சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரேயின் கோட்டிகேஹார் சோதனைச்சாவடியில் இவரது வாகனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் 85,000 ரூபாய் ரொக்கம் இருந்தது குறித்து விளக்கம் கேட்டனர். பணத்துக்கான ஆவணங்களைஅவர் காண்பித்தார்.
ஆனாலும், தேர்தல் அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, பனகல் போலீசில் ஒப்படைத்தனர்.

