sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2ஜி உத்தரவில் திருத்தம் கேட்பதா? மத்திய அரசு மீது காங்கிரஸ் புகார்!

/

2ஜி உத்தரவில் திருத்தம் கேட்பதா? மத்திய அரசு மீது காங்கிரஸ் புகார்!

2ஜி உத்தரவில் திருத்தம் கேட்பதா? மத்திய அரசு மீது காங்கிரஸ் புகார்!

2ஜி உத்தரவில் திருத்தம் கேட்பதா? மத்திய அரசு மீது காங்கிரஸ் புகார்!

3


ADDED : ஏப் 27, 2024 11:53 PM

Google News

ADDED : ஏப் 27, 2024 11:53 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'மத்திய அரசின் பாசாங்குதனத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது. '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடுகளை ஏலம்விட வேண்டும் என்று வலியுறுத்திய பா.ஜ., தற்போது அது தொடர்பான தீர்ப்பை திருத்தக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது' என, காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அனுமதி


காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியுள்ளதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசு சார்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவிருப்பதால், அதை விரைவாக விசாரிக்கவும் அனுமதி கேட்டுள்ளது.

காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2008ல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தி.மு.க.,வின் மூத்த தலைவர் ராஜா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, இந்த ஒதுக்கீடுகளுக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. ஊழல் நடந்துள்ளதாக கூறியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ல் அளித்த தீர்ப்பில், ஸ்பெக்ட்ரம் போன்ற நாட்டின் சொத்துச்களை ஏலம் வாயிலாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியது.

அப்போது, ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., தற்போது தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக, அந்த தீர்ப்பில் திருத்தம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் பாசாங்குதனத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது. மிகப்பெரும் பணக்கார தொழிலதிபர்களுக்கு உதவு வதற்காக மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது.

விசாரணை


தங்களுடைய கட்சிக்கு, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதற்கு, விமான நிலையம், துறைமுகம் என, பல அரசின் சொத்துகள், அந்த பணக்கார நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அரசு தாரைவார்த்துள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், இது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us