உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் அன்னிய முதலீடு சரிவு
உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் அன்னிய முதலீடு சரிவு
ADDED : ஆக 19, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:கடந்த 2023--24ம் நிதியாண்டில், இந்திய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில் துறையில், அன்னிய நேரடி முதலீடு 30 சதவீதம் சரிந்து, 5,037 கோடி ரூபாயாக குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2022--23ம் நிதியாண்டில், இந்த துறை, 7,194 கோடி ரூபாயை, அன்னிய நேரடி முதலீடாக பெற்றிருந்தது.

