sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நகைகளை பறிப்பது சாத்தியமா? பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

/

நகைகளை பறிப்பது சாத்தியமா? பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

நகைகளை பறிப்பது சாத்தியமா? பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

நகைகளை பறிப்பது சாத்தியமா? பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

5


ADDED : ஏப் 28, 2024 12:00 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வல்சாத்: “பிரதமர் பதவியின் மதிப்பு தெரியாமல் மோடி பேசுகிறார்,” என, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா குற்றஞ்சாட்டி உள்ளார்.

பா.ஜ.,வின் கோட்டையான குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளுக்கு, மே 7ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

இங்கு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வல்சாத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சமீபத்தில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'நீங்கள் அணிந்துள்ள தாலி உள்ளிட்ட நகைகளை பறித்து, முஸ்லிம்களுக்கு காங்கிரசார் கொடுத்து விடுவர்' என பேசியுள்ளார். இதையெல்லாம் கேட்டு உங்களால் சிரிக்கத்தான் முடியும்.

பதவியின் முக்கியத்துவத்தை உணராமல், நாட்டின் பிரதமர் இதுபோல் பேசி வருகிறார். ஒரு 'எக்ஸ் ரே' இயந்திரத்துடன் உங்கள் வீட்டுக்குள் நுழையும் காங்கிரஸ், உங்கள் ஆபரணங்களையும், பாதுகாப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் தாலி உள்ளிட்ட பொருட்களை பிடுங்கி மற்றவர்களுக்கு வழங்கும் என உங்களை அவர் எச்சரிக்கிறார். இது சாத்தியமா?

பா.ஜ., தலைவர்களும், வேட்பாளர்களும் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என கூறுகின்றனர். ஆனால் பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார்.

அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனரோ, அதை முதலில் மறுப்பர். பின், அதிகாரத்துக்கு வந்தபின் அதை செய்து முடிப்பர். இதுவே பா.ஜ.,வின் தந்திரம்.

பிரதமராக இருந்த என் பாட்டி இந்திரா, நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார். என் தந்தையும், நாட்டுக்காக உயிரைக் கொடுத்தார். பிரசாரத்துக்கு சென்ற அவரை, பல துண்டுகளாகத் தான் வீட்டுக்கு எடுத்து வந்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us