sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜவடேகர் - ஜெயராஜன் சந்திப்பு: காங்கிரஸ் கிளப்பும் சந்தேகம்

/

ஜவடேகர் - ஜெயராஜன் சந்திப்பு: காங்கிரஸ் கிளப்பும் சந்தேகம்

ஜவடேகர் - ஜெயராஜன் சந்திப்பு: காங்கிரஸ் கிளப்பும் சந்தேகம்

ஜவடேகர் - ஜெயராஜன் சந்திப்பு: காங்கிரஸ் கிளப்பும் சந்தேகம்

1


ADDED : ஏப் 27, 2024 11:56 PM

Google News

ADDED : ஏப் 27, 2024 11:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: 'கேரளாவில் பா.ஜ., தலைவர் பிரகாஷ் ஜவடேகரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த ஜெயராஜன் சந்தித்தது குறித்து, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் விளக்கமளிக்க வேண்டும்' என, மாநில காங்கிரஸ் வலியுறுத்திஉள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

வலியுறுத்தல்


இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளவர் இ.பி.ஜெயராஜன்.

இவர் குறித்து ஆலப்புழா பா.ஜ., வேட்பாளர் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதில், 'சொந்த கட்சியில் மிரட்டல் உள்ளதால் இடைத்தரகர் ஒருவர் வாயிலாக ஜெயராஜன் பா.ஜ.,வில் சேர திட்டமிட்டுள்ளார்.

'இதற்காக பா.ஜ., தலைவரும், கேரள மாநில பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகரை அவர் சந்தித்து பேசினார்' என, தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், 'பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்பை ஜெயராஜன் தவிர்த்திருக்கலாம்' என்றார்.

இந்நிலையில், இது குறித்து பதில் அளித்த ஜெயராஜன், 'பிரகாஷ் ஜவடேகரை என் மகனின் இல்லத்தில் சந்தித்தேன். அரசியல் அல்லது தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. பா.ஜ.,வில் சேரும் எண்ணமும் இல்லை' என விளக்கமளித்தார்.

இந்நிலையில், இருவரின் சந்திப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கமளிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து நேற்று அவர்கள் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கும், பா.ஜ.,வுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது. அவர் ஏன் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க வேண்டும்? இருவரும் என்ன பேசினர் என தெரியவில்லை.

சந்தேகம்


அவர்களுக்குள்ளே ஏதாவது 'டீலிங்' உள்ளதா? பினராயி விஜயன் மீதான வழக்குகளை தீர்க்க முதல்வருக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே ரகசிய பாலமாக ஜெயராஜன் செயல்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கமளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயராஜன், ''சமீபகாலமாக காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சங்கடமான நிலையை மறைக்கவே, காங்கிரஸ் எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us