ADDED : ஏப் 10, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தார்வாட் : ஹூப்பள்ளியில் மூன்று வெவ்வேறு சோதனைச் சாவடிகளில் 4.98 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளி - கார்வார் சாலையில் சங்கதிகொப்பா சோதனைச் சாவடியில் வாகனங்கள் சோதனையிடப்பட்டு வந்தன.
அவ்வழியாக வந்த காரை, பனவாசியை சேர்ந்த மனோகரா என்பவர் ஓட்டி வந்தார். காரை சோதனையிட்டபோது, 55,500 ரூபாய் ரொக்கம் இருந்தது.
இதற்கான ஆவணங்கள் கேட்டபோது, அவரிடம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, தாசில்தாரிடம் வழங்கினர்.
l ஹூப்பள்ளியின் தடாஸ் கிராசில் உள்ள சோதனைச் சாவடியில், காரில் 2 லட்சத்து, 21 ஆயிரத்து, 500 ரூபாயையும்; புனே - பெங்களூரு சாலையில் உள்ள சோதனைச் சாவடியில், 2 லட்சத்து, 21 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

