sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

/

பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி


ADDED : ஆக 20, 2024 01:55 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்,ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இன்ஸ்பெக்டர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

காஷ்மீரின் ஜம்மு பகுதியில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது.

இங்கு உள்ள பிர் பஞ்சால் பிராந்தியம் வனப்பகுதியையும், மலைப்பகுதிகளையும் கொண்டிருப்பதால், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள், இப்பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

கடந்த 14ம் தேதி ஜம்முவின் பாட்னிடாப் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் பிடிக்கச் சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில், நம் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில், ஜம்முவின் உதம்பூரின் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து, நேற்று சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் சுட்டதில், சி.ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் குல்தீப் குமார் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us