sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாகனம் 'மக்கர்' எஸ்.ஐ., அவதி

/

வாகனம் 'மக்கர்' எஸ்.ஐ., அவதி

வாகனம் 'மக்கர்' எஸ்.ஐ., அவதி

வாகனம் 'மக்கர்' எஸ்.ஐ., அவதி


ADDED : மே 07, 2024 11:26 PM

Google News

ADDED : மே 07, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா : ஓட்டுப்பதிவு பாதுகாப்பு பணிக்கு செல்லும் போது, எஸ்.ஐ.,யின் வாகனம் பழுதடைந்து நின்றதால், ஓட்டுச்சாவடிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டார்.

உத்தரகன்னடாவின் தான்டேலி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், தான்டேலி நகர் போலீசாருக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. போலீசாருக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள் பழையவை.

முக்கியமான பணிகளுக்கு செல்லும் போது, வழியில் வாகனங்கள் பழுதடைந்து நிற்பது வழக்கமாக உள்ளது. தான்டேலி நகர் எஸ்.ஐ., நேற்று மதியம் பாதுகாப்பு பணிக்காக புறப்பட்டார். ஜரூர் கிராமத்தின் அருகில் செல்லும் போது, ஜீப் பழுதடைந்து நின்றது. இதனை அருகில் இருந்த கேரேஜில் விட்டு விட்டு, வேறு வாகனத்தில் ஓட்டுச்சாவடிக்கு சென்றார்.

'உத்தரகன்னடாவின், பல்வேறு பிரச்னைகளை தீர்த்து பணியாற்றும் எஸ்.பி., விஷ்ணு வர்த்தன், தான்டேலி நகர போலீசாருக்கு தரமான வாகனங்களை வழங்க வேண்டும்' என, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us