ADDED : மார் 21, 2024 03:27 AM
கோலார்: கோலார் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக நேற்று வரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோலார் லோக்சபா தொகுதியில் தேர்தல் விதிகளை கண்காணிக்க 34 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் ஏற்கனவே 68 இடங்களில் வரையப்பட்டிருந்த சின்னங்கள் அழிக்கப்பட்டன.
மேலும், 224 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. 171 பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தவிர பங்கார்பேட்டையில் ஆவணங்கள் இல்லாமல் டெம்போ ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 280 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 3.60 லட்சம் ரூபாய்.
வேம்கல் பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட 1.90 லட்சம் ரூபாய், முல்பாகல் நங்கிலி சோதனைச் சாவடியில் வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தொகுதியில் நேற்று காலை வரை தேர்தல் விதிகளை மீறியதாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

