ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: சதமடித்தார் ரோகித் சர்மா
ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: சதமடித்தார் ரோகித் சர்மா
UPDATED : அக் 25, 2025 03:25 PM
ADDED : அக் 25, 2025 12:46 PM

சிட்னி: 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்கு ஆஸ்திரேலியா 236 ரன்கள் எடுத்துள்ளது. 237 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா நிதானமாக ஆடி வருகிறது . சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களம் இறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும், ரென்சா 56 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்தடுத்து, ஆஸி. வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 46.4 ஓவரில், 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி வீரர் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
79-1
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 32 ரன்களும், விராட் கோலி 10 ரன்களும் எடுத்துஆடி வருகின்றனர். 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.

