sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 லாரி மீது கார் மோதி விபத்து; சத்தீஸ்கரில் 5 பேர் பலி

/

 லாரி மீது கார் மோதி விபத்து; சத்தீஸ்கரில் 5 பேர் பலி

 லாரி மீது கார் மோதி விபத்து; சத்தீஸ்கரில் 5 பேர் பலி

 லாரி மீது கார் மோதி விபத்து; சத்தீஸ்கரில் 5 பேர் பலி


UPDATED : டிச 08, 2025 07:39 AM

ADDED : டிச 08, 2025 12:09 AM

Google News

UPDATED : டிச 08, 2025 07:39 AM ADDED : டிச 08, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாஷ்பூர்: சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் பகுதியில் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் சென்ற ஐந்து பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள கடங்கா பகுதியைச் சேர்ந்த சிலர் பக்கத்து ஊரான மனோரா பகுதியில் நடந்த பாட்டுக்கச்சேரியை பார்த்துவிட்டு, நேற்று அதிகாலை சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

துல்துலா அடுத்த பட்ரடோலி கிராமம் அருகே கார் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் முற்றிலும் நொறுங்கியதால், அதில் சென்ற ராம்பிரசாத் யாதவ், 26, உதய் குமார் சவ்கான், 18, சாகர் டிரிக்கி, 22, தீபக் பிரதான், 19, அங்கித் டிக்கா, 17, ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது பற்றி அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து நொறுங்கிய காரில் சிக்கியிருந்த ஐந்து உடல்களையும் மீட்டனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us