ADDED : டிச 20, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கட்டேர் பகுதியில், பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதனால், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இதில், பாரூக் அஹ்மத் பாட் உள்ளிட்ட ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பின் முன்னணி தலைவரான அஹ்மத் பாட், மீது, காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.