ADDED : ஜன 24, 2026 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தம்தரி - கரியபான்ட் - நவ் பாடா பகுதியை சேர்ந்த நக்சல்கள் ஒன்பது பேர் , தம்தரி மாவட்ட போலீசில் நேற்று சரண் அடைந்தனர். இதில் ஏழு பேர் பெண்கள். இவர்கள் நாக்ரி, சித்தனாடி மற்றும் மெயின்புர் உள்ளூர் கொரில்லா படையை சேர்ந்தவர்கள்.
இந்த பெண்கள் உட்பட ஒன்பது பேர் தலைக்கு, மொத்தம் 47 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததாக, ராய்ப்பூர் ஐ.ஜி., அம்ரேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
சரணடைந்தவர்களில் ஜோதி என்ற பெண் சித்தனாடி பகுதி நக்சல் குழு செயலர். தெலுங்கானாவை சேர்ந்த பாலம்மா, டிவிஷனல் குழு உறுப்பினர். இவர்கள் இருவர் தலைக்கும், தலா 8 லட்சம் ரூபாய் பரிசு அறி விக்கப்பட்டிருந் தது.

