ADDED : அக் 26, 2024 08:03 AM
பெங்களூரு:
போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகை வார இறுதியில் வருகிறது. கன்னட ராஜ்யோத்சவா வருவதால், தொடர் விடுமுறைகள் கிடைத்துள்ளன. சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, தனியார் பஸ் நிறுவனங்கள் மனம் போனபடி கட்டணம் வசூலிப்பதாக, போக்குவரத்துத் துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
தீபாவளியை முன்னிட்டு, கூடுதல் கட்டணம் வசூலித்தால், தனியார் பஸ் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த காரணத்தை கொண்டும், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கூடாது. ஒருவேளை கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்போம்.
பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களில், வெடிபொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை எண் 94498 63429, 94498 63426 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.