sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அபாய கட்டத்துக்கு சென்றது காற்று மாசு அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைப்பு

/

அபாய கட்டத்துக்கு சென்றது காற்று மாசு அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைப்பு

அபாய கட்டத்துக்கு சென்றது காற்று மாசு அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைப்பு

அபாய கட்டத்துக்கு சென்றது காற்று மாசு அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைப்பு


ADDED : நவ 09, 2025 01:07 AM

Google News

ADDED : நவ 09, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு, நேற்று அபாய கட்டத்துக்குச் சென்றது. டில்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 400ஐ தாண்டியது. இதனால், மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை டில்லி அடைந்துள்ளது.

காற்று மாசை கருத்தில் கொண்டு வரும் 15ம் தேதி முதல் பிப்., 15ம் தேதி வரை அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சியில் வேலை நேரத்தை மாற்றி அமைத்து முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை காற்று மாசு அபாய கட்டத்துக்குச் செல்லும். கடுங்குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக டில்லிவாசிகள் கடும் அவதிப்படுவர். இந்த ஆண்டும் அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்தே காற்று மாசு அதிகரிக்கத் துவங்கியது. மேலும், 10 ஆண்டுகளாக டில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, தீபாவளியை முன்னிட்டு அக்., 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால், அக்., 21ம் தேதியில் இருந்து காற்று மாசு உச்சத்துக்கு சென்றது. அடுத்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த காற்று மாசு நேற்ரு மீண்டும் உச்சத்துக்கு சென்றது.

டில்லியில் காற்றின் சராசரி தரக்குறியீடு நேற்று முன் தினம் 322ஆக இருந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு 361ஆக பதிவாகி இருந்தது. அலிப்பூர் - 404, ஐ-.டி.ஓ., - 402, நேரு நகர் - 406, விவேக் விஹார் - 411, வஜிர்பூர் - 420, புராரி - 418 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. இது, அபாயகரமான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அதேபோல, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நொய்டா - 354, கிரேட்டர் நொய்டா - 336, காஜியாபாத் - 339 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக பஞ்சாபில் 100, ஹரியானாவில் 18 மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 164 பேர் மீது நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு டில்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையும் என டில்லி காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.

காற்றின் தரக்குறியீடு 50 வரையில் இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை. 51 முதல் 100 வரை திருப்தியான நிலை, 101 முதல் 200 மிதமான நிலை, 201 முதல் 300 மோசமான நிலை, 301 முதல் 400 மிகவும் மோசமான நிலை மற்றும் 401 முதல் 500 என்றால் அது அபாய கட்டம் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளது.

காற்று மாசைக் கட்டுக்குள் வைக்க தண்ணீர் தெளித்தல், வெளிமாநில வாகன கட்டுப்பாடு என டில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், அரசு அலுவலகங்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு:

டில்லி அரசு அலுவலகங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும், டில்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் செயல்படுகின்றன.

டில்லியில் காற்றுமாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அரசு ஊழியர்கள் அவதிப்படுவதாலும் வேலை நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. வரும் 15ம் தேதி பிப்., 15ம் தேதி வரை டில்லி அரசு அலுவலகங்கள் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், மாநகராட்சி அலுவலகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் செயல்படும்.

நவ., 15ம் தேதி முதல் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அரசு அலுவலக வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை மூத்த அதிகாரிகள் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மோசமில்லை

டில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு காற்றின் தரம் சிறப்பாகவே உள்ளது. கடந்த, 2023ம் ஆண்டு நவம்பரில் காற்று மாசு கட்டுபாட்டின் மூன்றாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் அந்த அளவை இன்னும் எட்டவில்லை. துாசு மற்றும் வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பயிர்க் கழிவு எரிப்பு மற்றும் தொழிற்சாலை கழிவுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சாலையை துடைத்தல் மற்றும் தண்ணீர் தெளித்தல் ஆகிய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு காற்று மாசு அதிகரிப்பதற்கு முன்பே, காற்று மாசு கட்டுப்பாட்டின் மூன்று மற்றும் நான்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த பரிந்துரை செய்ய-ப்பட்டுள்ளது.



துவங்குது... குளிரு!

டில்லியில் வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 27.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட, 2.3 டிகிரி குறைவு என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இமயமலையின் மேற்கு பகுதியில் பனிப்பொழிவு துவங்கியதால் டில்லியில் குளிர்காற்று துவங்கி விட்டது. இனி, படிப்படியாக வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும் என கணித்துள்ளது. டில்லியில் இன்று மூடுபனி நிலவும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 28 டிகிரி செல்ஷியஸ் எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.








      Dinamalar
      Follow us