sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கி கடன் மோசடி: அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை

/

வங்கி கடன் மோசடி: அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை

வங்கி கடன் மோசடி: அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை

வங்கி கடன் மோசடி: அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை


ADDED : ஆக 06, 2025 02:48 AM

Google News

ADDED : ஆக 06, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 'ராகாஸ்' எனப்படும், 'ரிலையன்ஸ் அனில் அம்பானி' குழுமத்தின் கீழ், பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

கடந்த, 2017 - 19 வரை, அனில் அம்பானிக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.

ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழு ந்தது.

கடனை எளிதாக பெற, 'யெஸ்' வங்கியின் அதிகாரிகளுக்கு அனில் அம்பானி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இ துதொடர்பாக, அனில் அம்பானி மீது இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மும்பை மற்றும் டில்லியில், அனில் அம்பானிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை மூன்று நாட்கள் சோதனை நடத்தியது.

இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதன்படி, டில்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான அனில் அம்பானியிடம், அதிகாரிகள் 9 மணி நேரம் துருவிதுருவி விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us