கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்
கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்
ADDED : ஜன 23, 2026 12:56 PM

பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கான தடையை அம்மாநில உயர்நீதிமன்றம் நீக்கியது.
ரேபிடோ, ஓலா உள்ளிட்ட பைக் டாக்சிகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பைக் டாக்சி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பைக் டாக்சிகளுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்குவதாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பைக்குகளை பொதுப்போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்துவதற்கான விண்ணப்பங்களை, மாநில அரசிடம் பைக் டாக்சி நிறுவனங்கள் சமர்பிக்க வேண்டும் என்றும், அதற்கு அரசும் உரிய சட்டத்தை பின்பற்றி அனுமதி வழங்குமாறு நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

