sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவால் பங்களா அருகே போராடிய பா.ஜ.,வினர் கைது

/

கெஜ்ரிவால் பங்களா அருகே போராடிய பா.ஜ.,வினர் கைது

கெஜ்ரிவால் பங்களா அருகே போராடிய பா.ஜ.,வினர் கைது

கெஜ்ரிவால் பங்களா அருகே போராடிய பா.ஜ.,வினர் கைது


ADDED : ஜன 10, 2025 11:18 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் வாக்காளர்களை டில்லி வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாக பா.ஜ., மீது குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் பங்களா அருகே பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.

இந்நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களின் வாக்காளர்களை, புதுடில்லி சட்டசபை தொகுதியிலும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை பா.ஜ.,தான் கையாளுகிறது. தேர்தல் ஆணையத்திடமும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 8 வரை 13,000 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை,” என, குற்றம்சாட்டியிருந்தார்.

கெஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் பங்களா அருகே நேற்று காலை பா.ஜ.,வினர் திரண்டனர். கெஜ்ரிவாலை கண்டித்து கோஷமிட்டவாறே பங்களாவை நோக்கி சென்றனர்.

போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்ற பா.ஜ.,வினர் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். மேலும், ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us