sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,

/

டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,

டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,

டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,

31


UPDATED : பிப் 08, 2025 09:17 PM

ADDED : பிப் 08, 2025 05:12 PM

Google News

UPDATED : பிப் 08, 2025 09:17 PM ADDED : பிப் 08, 2025 05:12 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கிறது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.



டில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.

இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை இன்று எண்ணப்பட்டன.

வெற்றி நிலவரம்


பா.ஜ.,- 48

ஆம் ஆத்மி- 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தோற்ற தலைவர்கள்


டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சத்யேந்திர ஜெயின், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்தனர். முதல்வர் அதிஷி மட்டும் போராடி வெற்றி பெற்றார்.

கெஜ்ரிவால் வாழ்த்து

இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பா.ஜ.,வுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஏராளமான பணிகளை செய்துள்ளோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டும் செயல்படாமல், மக்களுடன் இருந்து அவர்களுக்காக பணியாற்றுவோம். இவ்வாறு அந்த வீடியோவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



கடந்த தேர்தலில்...!

2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. 67ல் அக்கட்சி வென்றது. வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.






      Dinamalar
      Follow us