டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,
டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,
UPDATED : பிப் 08, 2025 09:17 PM
ADDED : பிப் 08, 2025 05:12 PM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கிறது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
டில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை இன்று எண்ணப்பட்டன.
வெற்றி நிலவரம்
பா.ஜ.,- 48
ஆம் ஆத்மி- 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
தோற்ற தலைவர்கள்
டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சத்யேந்திர ஜெயின், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்தனர். முதல்வர் அதிஷி மட்டும் போராடி வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில்...!
2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. 67ல் அக்கட்சி வென்றது. வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.