sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி

/

டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி

டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி

டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி


ADDED : ஜூலை 17, 2024 03:16 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 03:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப்ரீத் விஹார்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என, டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்தார்.

ப்ரீத் விஹாரில் கிருஷ்ணா நகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் பேசியதாவது: பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.

வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும். தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய லோக்சபா தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே என்பதால், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். தண்ணீர் தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வு, தண்ணீர் திருட்டு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆட்சியில் உள்ள அரசு, தங்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக, சாக்குப்போக்குகளை மட்டுமே கூறி வருகிறது. டிஸ்காம்கள் மின் கட்டணத்தை ஏறக்குறைய ஒன்பது சதவீதம் உயர்த்தியதற்காக டில்லி அரசுக்கு எதிராக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும். மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us