sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டளிக்க பீஹார் ஊழியர்களுக்கு லீவு கொடுங்கள்: கட்டுமான நிறுவனங்களுக்கு காங். வலியுறுத்தல்

/

ஓட்டளிக்க பீஹார் ஊழியர்களுக்கு லீவு கொடுங்கள்: கட்டுமான நிறுவனங்களுக்கு காங். வலியுறுத்தல்

ஓட்டளிக்க பீஹார் ஊழியர்களுக்கு லீவு கொடுங்கள்: கட்டுமான நிறுவனங்களுக்கு காங். வலியுறுத்தல்

ஓட்டளிக்க பீஹார் ஊழியர்களுக்கு லீவு கொடுங்கள்: கட்டுமான நிறுவனங்களுக்கு காங். வலியுறுத்தல்


ADDED : நவ 02, 2025 10:19 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பீஹாரைச் சேர்ந்த ஊழியர்கள் சொந்த மாநிலத்தில் ஓட்டளிக்க தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.

பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு நவ.6ம் தேதி நடக்கிறது. தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் பீஹார் மக்கள், சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

இந் நிலையில், பீஹாரைச் சேர்ந்த ஊழியர்கள் ஓட்டு போடும் வகையில் அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தி உள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள பிற நிறுவனங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து டி.கே. சிவகுமார் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது;

கர்நாடகாவில் பணிபுரியும் பீஹார் மக்கள் இண்டி கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தேஜஸ்வி யாதவ் முதல்வராகவும், ராகுல் பிரதமராகவும் வருவதை பார்ப்பதே எங்களின் குறிக்கோள்.

பீஹாரைச் சேர்ந்த ஊழியர்கள் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டுப்போட அவர்களுக்கு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பினரும், மாநிலத்தில் உள்ள பிற நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும்.

,இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us