sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

/

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

2


UPDATED : மே 06, 2025 07:41 PM

ADDED : மே 06, 2025 07:22 PM

Google News

UPDATED : மே 06, 2025 07:41 PM ADDED : மே 06, 2025 07:22 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கலி ஜனார்த்தன் ரெட்டி. தற்போது எம்.எல்.ஏ., ஆக உள்ளார். இவருக்கு சொந்தமானது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல்வராக ஓய்எஸ் ராஜசேகர ரெட்டி இருந்த போது, 68.5 எக்டேர் மற்றும் 39.5 எக்டேர் இரும்பு தாது சுரங்க குத்தகைகக்கு விடுவதில் ஜனார்த்தன் ரெட்டி நிறுவனத்திற்கு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டதாகவும், மற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஐபிசி 120 பி, 420, 409, 468 மற்றும் 471 உள்ளிட்ட பிரிவுகளிலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 2007 ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் விதிகளை மீறி செயல்பட்டதும், பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் தாதுக்களை வெட்டி எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.884.13 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமானது. பிறகு வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்லவே, 2025 மே மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு ஐதராபாத்தின் நம்பள்ளியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 3,400 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. 219 சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஜனார்த்தன் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்ப வழங்கிய நீதிமன்றம் அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கரிபந்தம், ஸ்ரீலட்சுமி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us