ADDED : டிச 12, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை:தசரதனுக்கு ஸ்ரீராமன் பலி தர்ப்பணம் கொடுத்த பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது வழக்கம். இதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
பம்பை மணல் பரப்பில் பந்தல் அமைத்து 19 புரோகிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குத்தகை அடிப்படையில் இவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை இவர்களது வருமானம் ஆகும்.
ஸ்ரீராமன் வனவாசம் கொண்டிருந்தபோது தனது தந்தை தசரதன் இறந்த செய்தி அறிந்து பம்பை மணல் பரப்புக்கு வந்த அவரும் தம்பி லட்சுமணனும் இங்கே பலி தர்ப்பணம் நடத்தியதாகவும் அதன் நினைவாகவே இங்கு தர்ப்பணம் நடைபெறுவதாகவும் வரலாறு கூறுகிறது.

