sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: சத்தீஸ்கர் முன்னாள் காங்., முதல்வர் மீது வழக்கு

/

மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: சத்தீஸ்கர் முன்னாள் காங்., முதல்வர் மீது வழக்கு

மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: சத்தீஸ்கர் முன்னாள் காங்., முதல்வர் மீது வழக்கு

மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: சத்தீஸ்கர் முன்னாள் காங்., முதல்வர் மீது வழக்கு

2


ADDED : மார் 17, 2024 05:51 PM

Google News

ADDED : மார் 17, 2024 05:51 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர் : மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் போது, மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி விவகாரம் அங்கு பெரும் புயலை கிளப்பியது. அதில், அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதில் நடந்த பண மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பண மோசடி நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் மற்றும் அதிகாரிகள் மீதும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பூபேஷ் பாகேலுடன், சூதாட்ட செயலி உரிமையாளர்களான ரவி உப்பால், சவுரப் சந்திரசேகர் , சுபம் சோனி மற்றும் அனில் குமார் அகர்வால் உள்ளிட்ட 14 பேர் மீது ஐபிசி 120 பி( கிரிமினல் சதி), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us