நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா:சூரஜ்பூரில் உள்ள எம்.ஆர்.எல். டயர் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 20 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். 12 மணி நேரத்துக்கும் மேல் போராடி நேற்று காலையில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொழிலாளர்கள் உட்னடியாக வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஏராளமான டயர்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீயில் நாசம் அடைந்தன. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து ஆய்வு நடக்கிறது.

