sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துவாரகாவில் செயற்கை நீரூற்று கவர்னர் சக்சேனா திறந்து வைத்தார்

/

துவாரகாவில் செயற்கை நீரூற்று கவர்னர் சக்சேனா திறந்து வைத்தார்

துவாரகாவில் செயற்கை நீரூற்று கவர்னர் சக்சேனா திறந்து வைத்தார்

துவாரகாவில் செயற்கை நீரூற்று கவர்னர் சக்சேனா திறந்து வைத்தார்


ADDED : பிப் 22, 2024 02:19 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:துவாரகா துணை நகரத்தில், செயற்கை நீரூற்றுகள் மற்றும் மழைநீர் வடிகால்களை துணைநிலை கவர்னர் சக்சேனா திறந்து வைத்தார்.

டில்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில் தலைநகர் டில்லியை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

துவாரகா துணை நகரத்தில், 300 கோடி ரூபாய் செலவில் செயற்கை நீரூற்று மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, டில்லி துணைநிலை கவர்னரும், டில்லி மேம்பாட்டு ஆணைய தலைவருமான சக்சேனா திறந்து வைத்தார்.

அப்போது, சக்சேனா கூறியதாவது:

தலைநகர் டில்லியை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் பணியை முடித்து வருகின்றனர். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்.

துவாரகாவில் துாதரக பகுதி மற்றும் மாநில பவன்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

துவாரகா துணை நகரத்தை அழகுபடுத்தவும், காற்று மாசு பிரச்னையைத் தீர்க்கவும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை சீர்படுத்தும் பணியில் டில்லி மேம்பாட்டு ஆணையம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us