சபரிமலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்ட வானிலை மையம்
சபரிமலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்ட வானிலை மையம்
ADDED : நவ 26, 2024 07:06 AM

திருவனந்தபுரம்; சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு நவ.15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தினமும் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 7 செ.மீ., முதல் 11 செ.மீ., வரை கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

