sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்: சொல்கிறார் மம்தா

/

மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்: சொல்கிறார் மம்தா

மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்: சொல்கிறார் மம்தா

மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்: சொல்கிறார் மம்தா

2


ADDED : ஆக 28, 2025 04:00 PM

Google News

2

ADDED : ஆக 28, 2025 04:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா:'நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்,' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவின் பேரணி நடைபெற்றது.

மாணவர் பேரணியில் மம்தா பேசியதாவது:

'நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன், மொழி பயங்கரவாதத்தை, வங்காளிகள் மீது பாஜ கட்டவிழ்த்துவிட்டது, பொதுமக்களாகிய நீங்கள், உங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையம் மாநில அரசு அதிகாரிகளை மிரட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு, தேர்தல்கள் நடைபெறும்போது மூன்று மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆண்டு முழுவதும் இருக்காது.

வங்க மொழி இல்லையென்றால், தேசிய கீதமும் தேசிய பாடலும் எந்த மொழியில் எழுதப்பட்டன? சுதந்திர இந்தியாவில் வங்காளிகள் ஆற்றிய வரலாற்று பங்கை மக்கள் மறக்க வேண்டும் என்று பாஜ விரும்புகிறது. இந்த மொழியியல் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு மம்தா பேசினார்.






      Dinamalar
      Follow us