sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

/

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

2


UPDATED : மே 12, 2025 01:17 PM

ADDED : மே 12, 2025 11:19 AM

Google News

UPDATED : மே 12, 2025 01:17 PM ADDED : மே 12, 2025 11:19 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. பின்னர், நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடி அவரது இல்லத்தில், முப்படை தலைமை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. தற்போது ஆலோசனை கூட்டம் நிறைவு அடைந்தது. ஆலோசனை முடிந்து அனைத்து அதிகாரிகளும் புறப்பட்டனர்.

பாகிஸ்தான் அரசிடம் பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us