sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

/

டில்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

டில்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

டில்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்


ADDED : நவ 11, 2025 05:02 AM

Google News

ADDED : நவ 11, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் நேற்று கார் குண்டுவெடித்து 15 பேர் உயிரிழந்ததற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பிரதமர் மோடி

குண்டுவெடிப்பில் உறவினர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகளுடன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்.

காங்., எம்.பி., ராகுல்

குண்டுவெடிப்பு சம்பவம் மனதை நொறுங்கச் செய்கிறது. அப்பாவி மக்கள் உயிரிழந்தது கவலையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் , உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்

குண்டுவெடிப்பு பல அப்பாவி உயிர்களை பலிகொண்டதால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அங்கிருந்து வரும் காட்சிகள் மனதை உடைக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி

அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பரிதாபாத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், போலீசாரும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்

குண்டு வெடித்த சம்பவம் அபாயகரமானது. சிலர் உயிரிழந்துள்ளதாக வரும் தகவல்கள் சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்தும், பின்னால் சதி ஏதும் உள்ளதா என்பது குறித்தும் மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும். டில்லியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்ட முடியாது.






      Dinamalar
      Follow us