தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


ADDED : ஜன 09, 2026 05:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா; அரசியல் பழிவாங்கலுக்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசுக்கு தேர்தல் வியூகத்தை அளிக்கும் தனியார் நிறுவனத்தின் கோல்கட்டா அலுவலகம், அதன் இயக்குநர் வீடு என 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தை திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந் நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து கோல்கட்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் குதித்தார். திரிணமுல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியினருடன் பேரணி சென்ற அவர், அமலாக்கத்துறையின் கெயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களை பாஜ அரசு பயன்படுத்துகிறது என்றார்.

முன்னதாக அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

நம் கட்சியின் எம்பிக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த வெட்கக்கேடான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உள்துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு வெளியே ஜனநாயக உரிமையை பயன்படுத்தி போராடிய, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தெருக்களில் இழுத்துச் செல்வது சட்ட நடவடிக்கை அல்ல. அது சீருடையின் ஆணவம். போராட்டம் ஒரு ஜனநாயகம், பாஜவின் தனிப்பட்ட சொத்து அல்ல.

ஜனநாயகம் என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் வசதிக்கோ அல்லது சௌகரியத்திற்கோ ஏற்ப செயல்படுவதில்லை. பாஜ தலைவர்கள் போராட்டம் நடத்தும்போது, ​​அவர்கள் சிவப்பு கம்பள வரவேற்பையும் சிறப்புச் சலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சியினர் தங்கள் குரலை உயர்த்தும்போது, ​​அவர்கள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள், தடுத்து வைக்கப்படுகிறார்கள் மற்றும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாடு, பாஜவின் ஜனநாயகக் கருத்தை அம்பலப்படுத்துகிறது.

மரியாதை என்பது பரஸ்பரமானது. நீங்கள் எங்களை மதித்தால், நாங்கள் உங்களை மதிப்போம். நீங்கள் எங்களைத் தெருவில் இழுத்துச் சென்றால், சகிப்புத் தன்மை, கருத்து வேறுபாடு, ஜனநாயக நெறிமுறைகள் என்ற அரசியலமைப்புச் சட்டக் கருத்திற்குள் உங்களை மீண்டும் இழுத்து வருவோம்.

இது நமது இந்தியா. நாங்கள் உரிமையுள்ள குடிமக்கள். எந்த அரசாங்கமும், எந்தக் கட்சியும், எந்த உள்துறை அமைச்சரும் ஒரு ஜனநாயகத்தில் யார் கண்ணியத்திற்குத் தகுதியானவர் என்பதைத் தீர்மானிக்க முடியாது.

இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us