ADDED : மார் 01, 2024 11:02 PM

சந்தேஷ்காலியில் அட்டூழியத்தில் ஈடுபட்ட ஷாஜகான் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவில் வழக்கு பதியாமல் அவரை மம்தா பானர்ஜி காப்பாற்றி உள்ளார். சிறுபான்மையினரை திருப்திபடுத்தி ஓட்டுகளை பெற, அவர் புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
கிரிராஜ் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,
எதிர்காலம் சிதைகிறது!
உத்தர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுத்தாள் வெளியான சில நாட்களில், தற்போது பிளஸ் 2 வகுப்பு தேர்வுத்தாள் வெளியாகி உள்ளது. அரசில் உள்ள ஊழல்வாதிகளை காப்பாற்றும் அரசு, மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறது.
பிரியங்கா, பொதுச்செயலர், காங்.,
ஜெகன் அரசு மிரட்டுகிறது!
ஆந்திராவில் ஜெகன் மோகன் அரசு, தெலுங்கு தேசம் நிர்வாகிகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முடக்க, வருவாய் புலனாய்வு அமைப்பை பயன்படுத்துகிறது. இது குறித்து கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்.
சந்திரபாபு நாயுடு, தலைவர், தெலுங்கு தேசம்

