sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்

/

ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்

ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்

ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்

30


ADDED : டிச 15, 2025 01:13 PM

Google News

30

ADDED : டிச 15, 2025 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ராகுல் குறித்து சோனியாவிடம் கடிதம் மூலம் புகார் அளித்த ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலிமை இழந்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய தலைவருமான சோனியாவுக்கு, ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது மொகிம் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், 5 பக்கம் கொண்ட கடிதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

கட்சியின் தலைமைக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவேளை இருப்பதாகவும், 83 வயதான கார்கேவால், இளைய சமுதாயத்தினருடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமாந்த பிஸ்வா சர்மா போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமையும், பொறுப்பான பதவிகளை தகுதியற்றவர்களுக்கு வழங்கியதுதான் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மொகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us