ADDED : மார் 05, 2024 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வருகையில் மாற்றம் ஏற்பட்டு, இன்று பெலகாவிக்கு வருகிறார்.
லோக்சபா தேர்தலுக்காக, கட்சியின் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, நேற்றிரவு பெலகாவி வருவதாக இருந்தது.
ஆனால், அவரது பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை புதுடில்லியில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், நேராக பெலகாவி வருகிறார்.
இங்கிருந்து கார் மூலம், சிக்கோடி சென்று, பூத்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், பெலகாவி வரும் அவர், சிக்கோடி, விஜயபுரா, பாகல்கோட், பெலகாவி ஆகிய லோக்சபா தொகுதிகள் குறித்து, உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பின், சிறப்பு விமானம் மூலம், புதுடில்லி செல்கிறார். நட்டா வருகையை ஒட்டி, அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

