sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் குமார் அரசு வெற்றி

/

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் குமார் அரசு வெற்றி

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் குமார் அரசு வெற்றி

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் குமார் அரசு வெற்றி


ADDED : பிப் 13, 2024 07:27 AM

Google News

ADDED : பிப் 13, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா : பீஹார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமார், சமீபத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்தார்.

தொடர்ந்து, பா.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்த அவர், பீஹார் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் நேற்று, பீஹார் சட்டசபையில் முதல்வர் நிதீஷ் குமாரின் தே.ஜ., கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.

முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த, சட்டசபை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக, தே.ஜ., கூட்டணி அரசு கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, துணை சபாநாயகர் மகேஷ் குமார் அன்சாரி, நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தினார்.

அப்போது, 129 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். துணை சபாநாயகர் மகேஷ் குமார் அன்சாரியின் ஓட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால், அரசுக்கு ஆதரவாக 129 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்ததாக அறிவிக்கப்பட்டது.

குரல் வாயிலாக நடந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே, சபையில் நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ..,க்கள் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us