sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலி ஆவணங்களை கொடுத்து அரசு வேலை; உ.பி.,யில் சிக்கிய பாகிஸ்தான் பெண்!

/

போலி ஆவணங்களை கொடுத்து அரசு வேலை; உ.பி.,யில் சிக்கிய பாகிஸ்தான் பெண்!

போலி ஆவணங்களை கொடுத்து அரசு வேலை; உ.பி.,யில் சிக்கிய பாகிஸ்தான் பெண்!

போலி ஆவணங்களை கொடுத்து அரசு வேலை; உ.பி.,யில் சிக்கிய பாகிஸ்தான் பெண்!

3


ADDED : ஜன 09, 2026 02:29 PM

Google News

ADDED : ஜன 09, 2026 02:29 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: பாகிஸ்தானை சேர்ந்த பெண், உத்தரபிரதேசத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்து பணியாற்றி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஆசிம் நகர் போலீசார் தரப்பில் கூறியதாவது; ஆரம்ப கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், மஹிரா அக்தர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வேலையில் சேர்ந்துள்ளார். அவர் கும்ஹரியா கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற இவர், வேலைக்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளார். பின்னர், விவாக ரத்து ஆன பிறகு, பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தியாவுக்கு வந்துள்ளார். 1985ம் ஆண்டு இந்தியரை திருமணம் செய்து கொண்டார். இந்திய குடியுரிமை பெற்றவரைப் போல நடித்து, அரசு வேலையில் சேர்ந்துள்ளார்.

இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்த பிறகு, பள்ளிக்கல்வித்துறை அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us