sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவுக்கு நுழைந்த பாகிஸ்தானியர்: குஜராத் எல்லையில் இருவர் கைது

/

இந்தியாவுக்கு நுழைந்த பாகிஸ்தானியர்: குஜராத் எல்லையில் இருவர் கைது

இந்தியாவுக்கு நுழைந்த பாகிஸ்தானியர்: குஜராத் எல்லையில் இருவர் கைது

இந்தியாவுக்கு நுழைந்த பாகிஸ்தானியர்: குஜராத் எல்லையில் இருவர் கைது


ADDED : நவ 25, 2025 07:45 PM

Google News

ADDED : நவ 25, 2025 07:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்ச்: பாகிஸ்தானை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் இந்திய எல்லையில் நுழைந்தபோது இருவரையும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைது செய்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்த போபட் 24, அவருடன் பெண் தோழி கவுரி 20, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கால்நடையாக இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குள் நேற்று (நவம்பர் 24)நுழைந்தனர். அப்போது இருவரும் பிஎஸ்எப் எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கைதான இருவரும், தங்கள் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள எங்களது கிராமத்தில் இருந்து கடந்த நவம்பர் 23 ஆம் தேதி வெளியேறியதாக கூறினர். அவர்கள் இருவரும் கட்ச் பகுதியில் உள்ள நிலப்பரப்பு வழியாக சர்வதேச எல்லையை தாண்டி வந்தனர். எல்லை தாண்டி வந்ததன் காரணமாக, இருவரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் அடையான ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

கைதான இருவரும் மீது விரிவான விசாரணை நடந்து வருகிறது.கடந்த இரு மாதங்களில் இது இரண்டாவது கைது நடவடிக்கை ஆகும்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us