இண்டியா கூட்டணிக்கு வாக்களிப்பது வீண் என மக்கள் உணர்வு: பிரதமர் மோடி
இண்டியா கூட்டணிக்கு வாக்களிப்பது வீண் என மக்கள் உணர்வு: பிரதமர் மோடி
ADDED : மே 25, 2024 07:54 PM

புதுடில்லி: இண்டியா கூட்டணிக்கு வாக்களிப்பது வீண் என மக்கள் உணர்ந்துள்ளனர் என பிரதமர் மோடி எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஏழுகட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் ஆகியோர் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர்.
இந்நிலையில் ஆறாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது ‛எக்ஸ்' தளத்தில் கூறியது, இன்று நடந்த லோக்சபா 6-ம் கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வராது என்பதால் அதற்கு வாக்களிப்பது வீண் என மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

