sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

18 படியிலிருந்து நேரடியாக மூலவரை தரிசிக்க திட்டம்

/

18 படியிலிருந்து நேரடியாக மூலவரை தரிசிக்க திட்டம்

18 படியிலிருந்து நேரடியாக மூலவரை தரிசிக்க திட்டம்

18 படியிலிருந்து நேரடியாக மூலவரை தரிசிக்க திட்டம்


ADDED : நவ 20, 2024 02:14 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களை நேரடியாக சன்னிதிக்கு அனுப்பி கூடுதல் தரிசன வசதி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

தற்போது 18 படி ஏறி வரும் பக்தர்கள் இடது பக்கமாக திரும்பி மேம்பாலம் ஏறி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.

அதிலும் நேரடியாக பார்க்காமல் வலதுபுறம் திரும்பி, சில வினாடிகள் மட்டுமே தரிசிக்க முடியும். கூட்ட நேரத்தில் போலீசார் பக்தர்களை தள்ளி விடும்போது பலருக்கு தரிசனம் கிடைக்காத சூழ்நிலையும் இருக்கிறது.

இதை தவிர்த்து மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதை ஏற்று, 18 படியேறி வரும் பக்தர்களை, கொடி மரத்தின் பக்கவாட்டில் நேரடியாக கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு வாசலில் நுழைந்ததுமே மூலவர் தெரிவார். பக்தர்கள் கூடுதல் நேரம் மூலவரை தரிசிக்க முடியும்.

தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதியின் பின்புறம் வழியாக உள்ள பாலத்தில் மாளிகைபுறம் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து, 'பெய்லி' பாலம் வழியாக பம்பைக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இதற்கான சாத்தியம் குறித்து நேற்று ஆய்வு நடத்தினார்.

சோதனை அடிப்படையில் இந்த மாற்றத்தை அமல்படுத்தி பார்த்த பின், கேரள உயர் நீதிமன்றம், அரசு, மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

சிறப்பு தரிசன ஏற்பாடு


சபரிமலையில் 18 படிகளில் ஏறி வரும் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பம்பையில் இருந்து மலையேறி, 5 கி.மீ., நடந்து சன்னிதானத்துக்கு வரும் பக்தர்கள் 18 படிகளில் ஏறிய பின், பிளை ஓவரில் கியூ நின்று தான் அய்யப்பனை தரிசிக்க வேண்டும். இவ்வாறு நிற்கும் போது சிறுவர், சிறுமியரை அழைத்து வருபவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.

இதை கருதி, அவர்களுக்காக சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் தனியாக ஒரு வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் வலது பக்கம் வழியாக சென்று இதற்காக அமைக்கப்பட்ட தனி கேட் வழியாக, முதல் வரிசையில் தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

இது, மிகவும் வசதியாக இருக்கிறது என்று இந்த வரிசையில் சென்று, அய்யப்பனை தரிசித்து வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

பாலிதீனை தவிர்க்க தந்திரி வேண்டுகோள்

சபரிமலைக்கு பாலிதீன் கொண்டு வருவதை தவிர்க்கவும், மலையை சுத்தமாக பராமரிக்கவும் தலைமை பூஜாரியான தந்திரி கண்டரரு ராஜீவரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியது: விரதத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்களோ அது பயணத்திலும் இருக்க வேண்டும். இருமுடி கட்டில் பாலிதீன் பைகள் இருக்கக்கூடாது. சபரிமலை என்பது 18 மலைகளால் சூழப்பட்டது. இந்த மலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டியது பக்தரின் கடமை. தேவையில்லாத ஆசாரங்களை சபரிமலையில் செய்ய வேண்டாம். பம்பையில் சோப்பு போட்டு குளிப்பதும், ஆடைகளையும் விட்டுச் செல்வதும் மிகவும் தவறு. இப்படி ஒரு ஆசாரம் இங்கு கிடையாது. இதை பக்தர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது அவர்கள் அய்யப்பனுக்கு செய்யும் சேவையாக அமையும். இந்த சீசனில் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கிறது. இதற்காக கேரள அரசும் தேவசம் போர்டும் நல்ல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us