தேர்தல் கமிஷனை கண்டித்து பி.எல்.ஓ.,க்கள் போராட்டம்
தேர்தல் கமிஷனை கண்டித்து பி.எல்.ஓ.,க்கள் போராட்டம்
ADDED : ஜன 13, 2026 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கும் சூழலில், பி.எல்.ஓ.,க்கள் எனப்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிலர் உயிரிழந்ததை கண்டித்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில், வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது, சில ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணிசுமையால் தற்கொலை செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கட்டாவில் உள்ள மாநில தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 100க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ.,க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

