sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி

/

'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி

'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி

'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி


ADDED : ஜூலை 30, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலசோர் : போர் ஆயுதங்களை சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த 'பிரளய்' ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., வெற்றிகரமாக ந டத்தியுள்ளது.

ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை திங்கள் மற்றும் செவ்வாய் என அடுத்தடுத்து இரு நாட்கள் சோதிக்கப்பட்ட தாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறுகிய துார இலக்குகளை தாக்கும் வகையில், 'பிரளய்' ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் மேம்படுத்தியுள்ளது.

வெற்றிகரமாக சோதனை நடத்திய டி.ஆர்.டி.ஓ., ராணுவ படைகள் மற்றும் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். 150 முதல் 500 கி.மீ., துாரம் வரை தரைவழி இலக்குகளை தாக்கும் வகையில், 'பிரளய்' ஏவுகணை வடிவமைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த ஏவுகணையின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஏவு திறன் இந்த சோதனை மூலம் கண்டறியப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை வாயிலாக, நம் ராணுவ பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us