sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 போதை பொருள் கடத்திய வருவாய் ஆய்வாளர் கைது

/

 போதை பொருள் கடத்திய வருவாய் ஆய்வாளர் கைது

 போதை பொருள் கடத்திய வருவாய் ஆய்வாளர் கைது

 போதை பொருள் கடத்திய வருவாய் ஆய்வாளர் கைது


ADDED : டிச 06, 2025 02:07 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தியதாக, வருவாய் ஆய்வாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் போதை பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஆலப்புழா அருகே உள்ள மாராரிக்குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய சோதனையில், 20 கிராம் கொக்கைன், நான்கு எல்.எஸ்.டி., ஸ்டாம்புகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து, மூவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் ஆலப்புழாவை சேர்ந்த சஜேஷ், 59, கோட்டயத்தைச் சேர்ந்த ஆபிரகாம் மேத்யூ, 56, கோழிக்கோட்டைச் சேர்ந்த அமல் தேவ், 26, என, தெரிய வந்தது.

சஜேஷ் ஆலப்புழா மாவட்ட தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவர்கள் ஆலப்புழா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us