ADDED : பிப் 29, 2024 02:01 AM
நொய்டா:புதுடில்லி அருகே, தொழிலதிபரிடம் 1.15 கோடி ரூபாய் கொள்ளையடித்த உதவியாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.7 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், கவுதம் புத்தா நகர் மாவட்டம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் கோபால் கோயல். தானிய வியாபாரி. இவரிடம் தானிய சேகரிப்பு ஏஜென்டாக இருப்பவர் கேதன் சிங்.
கடந்த 26ம் தேதி இரவு கோபால் கோயலிடம் இருந்து சிலர், 1.15 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கேதன் சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன் மாமா உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கோயலிடம் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டார்.
புலந்த்ஷாஹர் மாவட்டம் சமைதா கிராமத்தில் உள்ள அவரது மாமா வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 1.07 கோடி ரூபாயை போலீசார் மீட்டனர்.
இந்தச் சம்பவத்தில் நான்கு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்யபட்டார்.கேதன் சிங்கின் மாமாவை தேடுகின்றனர்.

