போலீஸ் ஸ்டேஷன் கூரை இடிந்து உ.பி.,யில் உயரதிகாரி பலி
போலீஸ் ஸ்டேஷன் கூரை இடிந்து உ.பி.,யில் உயரதிகாரி பலி
ADDED : மே 25, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.
அங்குள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அறையில், வீரேந்திர குமார் மிஸ்ரா, 58, என்ற சப் - இன்ஸ்பெக்டர் நேற்று இரவு துாங்கினார்.
அப்போது பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு போலீஸ் ஸ்டே ஷனின் கூரை இடிந்து விழுந்தது. சக போலீசார், கட்டட இடிபாடுகளில் சிக்கிய வீரேந்திர குமாரை, படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

