sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் படத்தை 'மார்பிங்' செய்து மிரட்டிய கடை ஊழியர் சிக்கினார்

/

பெண் படத்தை 'மார்பிங்' செய்து மிரட்டிய கடை ஊழியர் சிக்கினார்

பெண் படத்தை 'மார்பிங்' செய்து மிரட்டிய கடை ஊழியர் சிக்கினார்

பெண் படத்தை 'மார்பிங்' செய்து மிரட்டிய கடை ஊழியர் சிக்கினார்

2


ADDED : ஜூலை 29, 2025 05:28 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:28 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்; ஜவுளிக்கடைக்கு வந்த பெண்ணை போட்டோ எடுத்து, 'மார்பிங்' செய்து பணம் கேட்டு மிரட்டிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண், தன் நிச்சயதார்த்தத்திற்காக ஆடைகள் வாங்க அங்குள்ள ஜவுளி கடைக்கு சென்றார். அங்கு ஒரு ஆடையை தேர்வு செய்த அந்த பெண், அதை உடை மாற்றும் அறையில் சென்று அணிந்த பின் வெளியே வந்து, கடை ஊழியரான அஜாஸ், 35, என்பவரிடம், போட்டோ எடுக்கும்படி தன் மொபைல் போனை கொடுத்துள்ளார்.

ஆனால், அவரோ, தன் போனில் போட்டோ நன்றாக இருக்கும் என்று கூறி, அவரது மொபைல் போனில் படம் எடுத்தார். பின், இளம்பெண்ணின் எண்ணை வாங்கி, 'வாட்ஸாப்'பில் படத்தை அனுப்பி உள்ளார்.

பின், அந்த போட்டோவை மார்பிங் முறையில் ஆபாச போட்டோவாக மாற்றிய அஜாஸ், அதை அந்த பெண்ணுக்கு அனுப்பி, சமூக வலைத்தளங்களில் அதை வெளியிடாமல் இருக்க தனக்கு, 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மிரட்டி உள்ளார். அந்த பெண், தன் உறவினர்களிடம் கூறியதை தொடர்ந்து, கடைக்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us